சூ. 291 :

கடுப்ப ஏய்ப்ப மருளப் புரைய

ஒட்ட ஒடுங்க ஓட நிகர்ப்பவென்று

அப்பா லெட்டே மெய்ப்பா லுவமம்

(15)
 

க - து:

மெய்யுவமத்திற்கு ஏற்கும் உவமச்சொற்கள் இவை என்கின்றது.
 

பொருள் :கடுப்ப   என்பது  முதலாகச்  சொல்லப்படும் அக்கூறாகிய
எட்டும் மெய்யுவமத்திற்குரிய உவமச்சொற்களாம்.
 

எ-டு:1.பல்பொறி யரவின் செல்புறங் கடுப்ப

யாற்றறல் நுணங்கிய நாட்பத வேனில் (நற்-157)

    

2.பளிங் கத்தன்ன   பல்காய்
நெல்லிமோட்டிரும்        பாறை
ஈட்டுவட்டேய்ப்ப
(அகம்-5)
3.வேய்மருள் பணைத்தோள் நெகிழ(குறு-318)
4.உரல்புரை பாவடி(கலி-21)
5.முத்துடைவான்கோடொட்டியமுலைமிசை(இளம்-மேற்)

6.பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்(")

7.செந்தீ ஒட்டிய வெண்சுடர்ப் பருதி (")

8.பரங்குன் றிமயக் குன்றம் நிகர்க்கும்(பரிபா-8)
 

எனவரும். இவை எட்டும் மெய்யுவமத்தின் பாலானமைக்குக்  காரணம் :
கடுத்தல் என்பது   ஐயுறுதலாகலான்    அஃது   பொருளுள்  ஒன்றனைத் துணியாமை   பற்றி  வருதலின் மெய்யுவமத்திற்குச் சிறந்ததாயிற்று. ஏய்ப்ப
என்பது    எய்த்தல்   என்பதன்   நீட்சியாகும்.   ஏய்த்தல்   இளைத்தற்
பொருட்டாகலின் வடிவுக்கு    ஏற்றதாயிற்று.   [பொருந்துதல்    என்னும் பொருளில்     வரும்    ஏய்தல்    வேறு; இது  வேறு. ஏய்தல் என்பது எச்சமாகவரின்   ‘ஏய’   என   வரும்]    மருளுதல்   என்பது ஒன்றைப்
பிறிதொன்றாகக் கருதும்   மயக்கமாகலின் இதற்குச்   சிறந்ததாயிற்று. புரை
என்பது   உயர்பு   ஆகலானும்,   ஒடுங்குதல்  என்பது ஒன்று ஒன்றனுள்
அடங்குதலாகலானும் ஒட்டுதல் என்பது நீக்குதல் பொருட்டாகலானும்  நிகர்
என்பது அளவைப்  பொருட்டாகலானும் இவையும் வடிவிற்குச் சிறந்துரிமை
பெறலாயின.