சூ. 128 :சூழ்தலும் உசாத்துணை நிலைமையிற் பொலிமே
(36)
 

க - து :

செவிலி மகளாகிய தோழி சிறத்தற்குக் காரணம்
கூறுமுகத்தான் அவட்குரிய தோரிலக்கணங் கூறுகின்றது.
 

பொருள் : செவிலி   மகளாகிய  தோழி  கிழவன்,  கிழத்தி   ஆகிய
இருவரது       நிலைமைகளை     ஆய்ந்துணர்தலும்        கிழத்திக்கு
உசாத்துணையாதலும் ஆகிய தன்மைகளான் பொலிவுற்றுத் திகழ்வாள்.
  

பொதுப்படக் கூறியதனான் சிறுபான்மை செவிலிக்கும் தலைவற்கும்
உசாத்துணையாதலும் கொள்க.