சூ. 187 :

செலவிடை யழுங்கல் செல்லாமை யன்றே

வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்

(44)
 

க - து : 

இது தலைவற் குரியதோரியல்பு கூறுகின்றது.
 

பொருள் :  ஓதல் முதலாய வினைக்கண் பிரிதலைக் கருதிய தலைவன்
போதலைத்  தவிர்ந்து  இகழ்ந்திருத்தல்   செல்லாமைக்குரியதன்று.  அஃது
தலைவியை    வற்புறுத்தி    ஆற்றுவித்துப்   பிரிதலைக்   கருதுதலாகிய
தவிர்ச்சியாகும்.
 

எ - டு :

‘அளிநிலை பொறா அது’ என்னும் அகப்பாட்டினுள் 

(5)

"மணியுரு விழந்த அணியழி தோற்றம்

கண்டே கடிந்தனம் செலவே ஒண்டொடி

உழைய மாகவும் இனைவோள்

பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே"
 

எனப் பின்னர் ஆற்றுவித்தலைக்கருதி அழுங்கியவாறு கண்டுகொள்க.