சூ. 156 :சொல்லிய கிளவி அறிவர்க்கும் உரிய
(13)
 

க - து :

கற்பின்கண் அறிவர் கூற்று நிகழுமாறு கூறுகின்றது.
 

பொருள் :  மேற்கூறிய  கிளவிகள்  செவிலிக்கேயன்றி   அறிவர்க்கும்
உரியவாகும்.
 

எ - டு :

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண்

(குறள்-55)
 

மனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(குறள்-51)
 

இவை நல்லவை யுரைத்தல்.
 

எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை

அட்டிற் புகாதாள் அரும்பிணி - அட்டதனை

உண்டி உதவாதாள் இல்வாழ்யேய் இம்மூவர்

கொண்டானைக் கொல்லும் படை 

(நாலடி-363)
 

இஃது அல்லவை கடிதல்.