சூ. 140 :

தாய்அறி வுறுதல் செவிலியொ டொக்கும்

(48)
 
க - து :
 

நற்றாய் தலைவி யொழுக்கத்தை அறியுமாறு கூறுகின்றது.
 

பொருள் :தலைவியது களவொழுக்கத்தை நற்றாய் அறிந்துகொள்ளுதல்
செவிலி அறிந்து கோடலொடு ஒக்கும்.
 

"தாய்க்கும்    வரையார்   உணர்வுடம்  படினே’ என்றதனான் ஈண்டுச்
செவிலியொடு   ஒக்கும்  என்றார். அங்ஙனம் மதியுடம்பட்டு உணராதவழிச்
செவிலி அறத்தொடு நிற்றலான் உணரும் என்பது இதன் பயனாம்.
 

எ - டு :

"எனவாங்கு, அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட

என்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்"

(கலி-39)
 

என்பதனாற் கண்டு கொள்க.