எ - டு : | ‘காய்ந்து செலற்கனலி’ என்னும் அகப்பாட்டினுள் | (55) |
| "வயக்களி றன்ன காளையொடு என்மகள் | |
| கழிந்ததற் கழிந்தன்றோ விலனே ஒழிந்துயாம் | |
| ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ | |
| வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு | |
| கண்படை பெறேஎன் கனவ" | |
எனச் செவிலி கனவு கண்டமை கூறியது காண்க. நற்றாய் கனவு கண்டு கூறியதாக வரும் இலக்கியம் வந்துழிக் காண்க. |