சூ. 186 : | துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன் |
| வன்புறுத் தல்லது சேறல் இல்லை |
(43) |
க - து : | வினைவயிற் பிரியும் தலைமகற்காவதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : தலைவனது செலவைக் குறிப்பானறிந்து தலைவி துன்ப மிக்க பொழுதினும் அஃதறியாது ஒழுகும் பொழுதினும் எல்லாம் தலைவன் செய்வினைக்கண் பிரியுமிடத்து இன்னே வினை முடித்து மீள்வேன் எனத் தன் அன்பினையும் தலைவியது பண்பினையும் கூறி வற்புறுத்தியல்லது பிரிந்து செல்லுதல் புலனெறி வழக்கில்லை. |
எ - டு : | அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும் |
| பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும் |
| புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப் |
| பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர் |
| வருவர் கொல்வயங் கிழாய்! |
(கலி-11) |
எனத்தலைவி கூறியவாறு கண்டுகொள்க. |