சூ. 186 :

துன்புறு பொழுதினும் எல்லாம் கிழவன்

வன்புறுத் தல்லது சேறல் இல்லை

(43)
 

க - து : 

வினைவயிற் பிரியும் தலைமகற்காவதொரு மரபு கூறுகின்றது.
 

பொருள் :  தலைவனது  செலவைக்  குறிப்பானறிந்து  தலைவி துன்ப
மிக்க பொழுதினும் அஃதறியாது ஒழுகும் பொழுதினும் எல்லாம்  தலைவன்
செய்வினைக்கண்   பிரியுமிடத்து  இன்னே   வினை  முடித்து  மீள்வேன்
எனத்    தன்    அன்பினையும்    தலைவியது    பண்பினையும்   கூறி
வற்புறுத்தியல்லது பிரிந்து செல்லுதல் புலனெறி வழக்கில்லை.
 

எ - டு :

அரிதாய அறனெய்தி அருளியோர்க் களித்தலும்

பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்

புரிவமர் காதலின் புணர்ச்சியும் தருமெனப்

பிரிவுஎண்ணிப் பொருள்வயிற் சென்றநம் காதலர்

வருவர் கொல்வயங் கிழாய்!

(கலி-11)
 

எனத்தலைவி கூறியவாறு கண்டுகொள்க.