தத்தம் தகுதிகட்கு ஏற்பச் செல்லாமையும் பிறர் ஐயத்திற்கு ஏதுவாம் ஆதலின் ‘இயங்கலும் உரியர்’ என்றார். உம்மையான் ஊர்தியின்றிச் சேறலே பெருபான்மை எனக் கொள்க. பிறவாவன வையமும், அத்திரி முதலாயினவுமாம். |
எ - டு : | கடிகொண் டனளே தோழி பெருந்துறை |
| எல்லையும் இரவும் என்னாது கல்லென |
| வலவன் ஆய்ந்த வண்பரி |
| நிலவுமணல் கொட்குமோர் தேருண்டு எனவே |
(அக-20) |
| கடுமான் பரிய கதழ்பரி கடைஇ |
| நடுநாள் வரூஉம் |
(நற்-149) |
இவை தேரும் பரியும் ஊர்ந்து வந்தமை கூறின. |
| கழிச்சுறா எறிந்த புட்டாள் அத்திரி |
| நெடுநீ ரிருங்கரிப் பரிமெலிந் தசைஇ |
(அக-120) |
என்பது அத்திரியூர்ந்து வந்தமை கூறிற்று. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. |
இதன்கண் பொருளியற்குச் சிறந்த குறிப்பமைதி இல்லையாயினும் தோழி எளித்தல், ஏத்தல் முதலிய வகையான் அறத்தொடு நிற்றற்கண் கூறப்படும் தலைவனது சிறப்புப் புலப்படுமாதலின் இதனை ஈண்டு வைத்தார் என்க. |