சூ. 127 :

தோழி தானே செவிலி மகளே

(35)
 
க - து : 

ஒன்றித் தோன்றும் தோழி பற்றியதொரு விளக்கங்
கூறுகின்றது.
 

பொருள் :தலைவியொடு    தோழமை   பூண்டொழுகும்  ஆயத்தார்
பலராயினும் அவருள் கிளந்து கூறப்பெறும்  தோழியாவாள்   செவிலியீன்ற
மகளாவாள். தானே என்பதனுள்  ஏகாரம்  பிரிநிலை.  தான்,  ஈற்றேகாரம்
இரண்டும் இசைநிறை.