சூ. 139 :

தந்தையும் தன்னையும் முன்னத்தின் உணர்ப

 
க - து :

களவின்கண்     தந்தை    தன்னையர்   பற்றியதொரு  மரபு
கூறுகின்றது.
 

பொருள் : தலைவியது    களவொழுக்கத்தை   அவள்    தந்தையும்
தமையன்மாரும் குறிப்பினான் உணர்ந்து கொள்ப.
 

அக்குறிப்பிற்கு ஏதுவாவார் நற்றாயும் செவிலியுமாவர்.
 

எ - டு :

"இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

தெருமந்து சாய்த்தார் தலை"

(கலி-39)
 

என வந்தமை காண்க.