சூ. 313 :தடுமா றுவமம் கடிவரை யின்றே 
(37)
 

க - து :

உவமத்தைத் தடுமாறிக் கூறினும் ஆம் என்கின்றது.
 

பொருள் : இஃது   இப்பொருளை   ஒக்கும்   என  வரையறுத்தற்கு இயலாமல் சிலவும் பலவுமாகத் தடுமாறிவரும் உவமமும் நீக்கப்படுதலில்லை.
 

தடுமாறுவமும்   என்னும்   எச்சவும்மை   தொக்கு நின்றது. இதனைத்
"தடுமாறு வரலும்" என்னும் இளம்பூரணர் பாடத்தான் அறிக.
 

எ - டு :

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து

(குறள்-1085)
 

எனவரும். இம்மூன்றும் உடைத்து என்றதனான் இதுவோ அதுவோ என
ஐயவாய்பாட்டான் வரும் வேறுபட வந்த உவமத் தோற்றம் வேறு இதுவேறு
என்பது புலனாம். தடுமாறுவமம் என வாளா கூறினமையான்.
 

மதியும் மடந்தை முகனும் அறியா

பதியிற் கலங்கிய மீன்

(குறள்-1116)
 

என்றாற் போல தடுமாறு கூறலும் கொள்க.