சூ. 97 : | நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக் |
| கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும் |
(5) |
க - து : | ஐயங்களையும் கருவி கூறிய முகத்தான், காமத்திணையின்கண் பேச்சு நிகழ்த்தும் கருவியாமாறு கூறி அதனான் குறிப்பறிதல் நிகழும் இயல்பு கூறுகின்றது. |
பொருள் :தலைமக்கள் இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர் தம் கருத்துக்களை ஒன்றுபடுத்தற்கு உணர்வினைக் கூட்டியுரைக்கும் குறிப்புரைகளாகும். |
என்றது ‘காமஞ் சொல்லா நாட்ட மின்மையின்’ அவற்றான் தத்தம் உள்ளக் கருத்தினை அளாவி ஒருவர் ஒருவரின் குறிப்பினையறிந்து கொள்வார் என்றவாறு. நோக்கமே பேச்சுமொழி யொப்பக் கருத்துரைக்கும் என்பதனைக் “கண்ணொடு கண்ணினைக் நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் மில" (குறள்) என்பதனானறிக. |
தலைவன் கூற்றானும் உணர்த்தற்குரியன் ஆதலின் நோக்கத்தான் உரைக்கும் குறிப்புரை தலைவியிடத்துச் சிறப்புரிமை பெறும். இதனைப் பின்வரும் 19, 20, 28 ஆம் நூற்பாக்களான் அறிந்து கொள்க. |