சூ. 97 :

நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்

கூட்டி யுரைக்கும் குறிப்புரை யாகும்

(5)
 

க - து :

ஐயங்களையும்   கருவி  கூறிய முகத்தான், காமத்திணையின்கண்
பேச்சு   நிகழ்த்தும்   கருவியாமாறு கூறி அதனான் குறிப்பறிதல்
நிகழும் இயல்பு கூறுகின்றது.
 

பொருள் :தலைமக்கள்  இருவரின் நோக்கங்களும் (கண்களும்) அவர்
தம்    கருத்துக்களை    ஒன்றுபடுத்தற்கு  உணர்வினைக் கூட்டியுரைக்கும்
குறிப்புரைகளாகும்.
 

என்றது  ‘காமஞ்    சொல்லா  நாட்ட மின்மையின்’ அவற்றான் தத்தம்
உள்ளக் கருத்தினை   அளாவி    ஒருவர்   ஒருவரின் குறிப்பினையறிந்து
கொள்வார் என்றவாறு. நோக்கமே பேச்சுமொழி யொப்பக்  கருத்துரைக்கும்
என்பதனைக் “கண்ணொடு கண்ணினைக்   நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் மில" (குறள்) என்பதனானறிக.
 

தலைவன்    கூற்றானும்    உணர்த்தற்குரியன் ஆதலின் நோக்கத்தான்
உரைக்கும் குறிப்புரை தலைவியிடத்துச் சிறப்புரிமை    பெறும்.  இதனைப்
பின்வரும் 19, 20, 28 ஆம் நூற்பாக்களான் அறிந்து கொள்க.