இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் உரை நூலொடு பொருந்து மாறில்லை. இனி, வினைமேற் சென்ற தலைவன்பால் தலைவியது நிலையை உரைப்பின் அவன் செய்வினைக்கண் கலக்கமுறுமாதலின் வினை முடித்த பின்னல்லது தலைவியின் பிரிவாற்றாத நிலையைப் பாசறை முதலிய இடங்களிற் கூறுதல் புலனெறி வழக்காகாமையின் இளம்பூரணர் கருத்து ஆராய்தற்குரியதாகும். அவர் காட்டிய கலிப்பாட்டு (கலி-30) வினைமுற்றிய பின் தலைவனிடத்துக் கூறியதாகும். |