சூ. 107 :பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே
(15)
 

க - து :

பெருந்திணைப் பாங்காக நிகழ்வன இவை என்கின்றது.
 

பொருள் :பன்னிரு   நிமித்தங்களுள்   பின்னர்  நின்ற  "சொல்லவட்
சார்த்தலின் புல்லியவகை, அறிந்தோ ளயர்ப்பின் அவ்வழி மருங்கிற் கேடும்
பீடும்   கூறுதல்,   தோழி   நீக்கலின் ஆகிய நிலைமை, மடன்மா கூறுதல்
ஆகிய   நான்கும்   அகனைந்திணைக்கண்   பெருந்திணை   ஒழுக்கமாக
அமையும்.