பொருள்: எண்ணரும் பாசறைக்கண் ஆடலும் பாடலும் நிகழ்த்தும் புறத்தோராய பரத்தையரொடு சென்று இருத்தல் பொருத்துவதாகும் எனக் கூறுவர் புலவர். அவர் படை மறவர் அயர்ச்சி நீங்கப் பாடியும் ஆடியும் இன்புறுத்தற்கும் வெற்றி பெற்றவிடத்துக் குரவை முதலாய கூத்தியற்றுதற்கும் உரியராகலின் ‘புரைவதாகும்’ என்றார். |