1. புதுமையாவது :அதுகாறும் காணாததைக் காண்டலும் நிகழாதது நிகழ்தலுமாம். |
எ - டு : | நீங்கிற் றெறூஉம் குறுகுங்காற் றண்ணென்னும் |
| தீயாண்டுப் பெற்றா ளிவள் |
(குறள்-1104) |
என்றது தன்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை. |
| ................... பெருந்தேர் யானும் |
| ஏறிய தல்லது வந்த வாறு |
| நனியறிந் தன்றோ விலனே |
| .................. இல்வயின் நிறீஇ |
| இழிமின் என்றநின் மொழிமருண் டிசினே |
(அகம்-384) |
என்பது பிறர்கண் நிகழ்ந்த புதுமைபற்றிப் பிறந்த மருட்கை. |
2. பெருமையாவது :அளவையின் இகத்து கழியப் பெரிதாயினது எனக் கருதிக் கோடலாம். (பெருமை - பெருக்கம்) |
எ - டு : | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் |
| அள்ளிக்கொள் வற்றே பசப்பு |
(குறள்-1127) |
கையான் முகக்குமளவிற்குப் பெருகிற்றென்றலின் இது தன்கண் நிகழ்ந்த பெருமைபற்றிப் பிறந்த மருட்கையாம். |
| கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் |
| திங்களைப் பாம்புகொண் டற்று |
(குறள்-1146) |
ஒரு நாளைக் காட்சியளவிற்றாக நில்லாது அலர் ஊரெங்கும் பரவிற்றென்றலின் இது பிறர்கட்டோன்றிய பெருமைபற்றி வந்த மருட்கை. |
3. சிறுமையாவது : அளவையின் இகந்து தவச்சிறிதாயினது எனக் கருதிக்கோடல். (சிறுமை - சிறுத்தல்.) |
எ - டு : | தணந்தமை சால அறிவிப்ப போலும் |
| மணந்தநாள் வீங்கிய தோள் |
(குறள்-1233) |
இது தன்கண் நிகழ்ந்த சிறுமைபற்றிப் பிறந்த மருட்கை. |
| மைம்மல ரோதி மணிநகைப் பேதைதன் |
| கொம்மை வரிமுலை ஏந்தினும் - அம்ம |
| கடையிற் சிவந்த கருநெடுங்கட் பேதை |
| இடையிற் சிறியதொன் றில் |
(பேரா - மேற்கோள்) |
இது பிறர் கட்டோன்றிய சிறுமைபற்றி வந்த மருட்கை. |
4. ஆக்கமாவது : ஒன்றினின்று ஆதற்கியலாத ஒன்று ஆதலும் ஒன்று பிறிதொன்றாகத் திரிதலுமாம். |
எ - டு : | புலப்ப லெனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் |
| கலத்த லுறுவது கண்டு |
(குறள்-1259) |
புலவி கலவியாகத் திரிந்த தென்றலின் இது தன்கட்டோன்றிய ஆக்கம் பற்றிப் பிறந்த மருட்கையாம். |
| அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் |
| அடிக்கு நெருஞ்சிப் பழம் |
(குறள்-1120) |
தனக்கு மென்மையாயவை தலைவிக்கு வன்மையாயின என்றலின் பிறர்கட்டோன்றிய ஆக்கம் பற்றிவந்த மருட்கை. இனிப் பேராசிரியர், |
| "எருமை யன்ன கருங்கல் லிடைதோ |
| றானிற் பரக்கும் யானைய முன்பிற் |
| கானக நாடனை நீயோ பெரும |
(புறம்-5) |
என்றது. |
நரிவெரூஉத்தலையார் சாபம் நீங்கி நல்லுடம்பு பெற்றமையான் தன்கண் தோன்றிய ஆக்கம்பற்றி வியப்புப் பிறந்ததென்பார். நல்லுடம்பு பெற்ற நிகழ்ச்சி அச்செய்யுட்கண் அமையாமையான் அது பொருந்துமாறில்லை என்க. |
| உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி |
| இறப்ப நிழற்பயந் தாங்கு |
(நாலடி - 38) |
என்பதனைப் பிறபொருளாக்கம்பற்றிப் பிறந்த வியப்பிற்கு எடுத்துக்காட்டுவார் அவர். அஃது இயற்கை யாதலன்றி ஆக்கமாகாமையறிக. |
இனி "மதிமை சாலா மருட்கை" என்றமையான் சிறியோர் பெருஞ்செயல்புரிதலும் பெரியோர் சிறுசெயல்புரிதலும் வியப்பின் பாற்படுத்து அடக்கிக் கொள்க. |
எ - டு : | "கிண்கிணி களைந்த கால்" என்னும் புறப்பாட்டு |
| (புறம்-77) சிறியோன் பெருஞ்செயல் செய்ததாம். |
| அன்னான் ஒருவன்தன் ஆண்டகை விட்டென்னைச் |
| சொல்லுஞ் சொற்கேட்டி சுடரிழாய் |
(கலி-47) |
என்பது பெரியோன் சிறுசெயல் புரிந்ததாம், பிறவும் இவ்வாறு வருவனவற்றை ஓர்ந்து கொள்க. |