தன்வயின் வரூஉம் நன்னயமாவன : இருவகைக் குறியிடத்தும் தலைவனை நேர்தலும், பிரிவுழிக்கலங்கலும், வரைபொருட் பிரிவின்கண் ஆற்றியிருத்தலும், உடன் போக்கிற்கு ஒருப்படுதலும் அவை போல்வன பிறவுமாம். அதன் மருகின் நாட்டமாவது : தலைவியை அரியளாக்குதலும், தலைவனைச் சேட்படுத்தலும், வரைவு கடாதலும், அறத்தொடு நிற்றலும், உடன்போக்கு வலித்தலும் அவை போல்வன பிறவுமாம். |