தலைவியாற் சுட்டப்பெறும் களன் தலைவி முன்பே அறிந்ததாகித் தலைவன் உணர அவளான் அறிவிக்கப்பட்ட இடனாகலின் "அவள் அறிவுணர வரும்வழி" என்றார். புறம் என்றது இல்லத்தைச் சார்ந்தும் அடுத்தும் அமைந்த பொழிலும் சோலையும், புனமும், கானலும் ஆகிய இள மகளிர் சென்று விளையாடி வருதற்குரிய இடங்களாம். |