பொருள் : தலைவன் பரத்தமை ஒழுக்கத்தை இனி மேவாது மறுத்தலை வேண்டுதலானும், தலைவி அவன் புறத்தொழுக்கினை அறிந்திருந்தும் அதனைப் பொறுத்தாற்றும் பெண்மைக் குணமாகிய மடப்பத்தை உரிமையாகக் கொண்டொழுகுதலானும் சொலத்தகு கிளவியேயன்றி அன்பிலை கொடியை எனத் தலைவனைக் கூறுதற்கும் தோழி உரியளாவாள். |
பணிமொழியேயன்றி இங்ஙனம் முனிந்து கூறற்கும் உரியள் என உம்மை இறந்தது தழீஇநின்றது. |
எ - டு : | "கண்டவரில் எனும்" நெய்தற்கலியுள் | (125) |
| அன்பிலை எனவந்து கழறுவல் ஐயகேள் |
| மகிழ்செய் தேமொழித் தொய்யில்சூழ் இளமுலை |
| முகிழ்செய முள்கிய தொடர்பவள் உண்கண் |
| அவிழ்பனி உறைப்பவும் நல்காது விடுவாய் |
| இமிழ்திரைக் கொண்க கொடியை காண்நீ" |
என மிகைத்துக் கூறியவாறு கண்டு கொள்க. |