சூ. 220 : | மிக்க பொருளினுட் பொருள்வகை புணர்க்க |
| நாணுத்தலைப் பிரியா நல்வழிப் படுத்தே |
(24) |
க - து : | இது புலனெறி வழக்குப்பற்றிச் செய்யுள் செய்யும் நல்லிசைப் புலவோர்க் காவதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : அகப்பொருளின்கண் தலைமக்களது ஒழுகலாறு கைகடந்து நிகழுமிடத்து அவற்றைச் செய்யுள் செய்யும் நல்லிசைப்புலவோர் அவர்தம் நாணுடைமை நீங்காமைக்குரிய நல்லமரபுகளை உள்ளடக்கி இசைதிரிந்திசைக்கும் சொற்களைப் புணர்த்துக்கூறுக. |
ஈண்டு ‘நாண்’ என்றது மகளிர்க்குரிய குணத்தையன்று. இருபாலார்க்கும் உரிய நாணுடைமை என்னும் பண்பினையாம். இதனைக், |
கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல் |
நல்லவர் நாணுப் பிற |
(குறள்-1011) |
என்றதனான் அறிக. |