பொருள் :தலைவன் கூறும்மொழிக்கு எதிர்மொழி கூறுதல் பாங்கற் குரியதாகும். அஃதாவது வேட்கை காரணமாகத் தலைவன் கூறும்மொழிகள் அவன் பெருமைக்கு ஏற்பனவாக இல்லை எனக் கருதுமிடத்து அவற்றை மறுத்துக் கூறுதல் பாங்கற்கு உரியதாகும் என்றவாறு. எனவே ஏனைய வாயில்கள் எதிர்மொழி கூறுதல் புலனெறி வழக்காகாது என்பது பெறப்படும். |