சூ. 137 : | மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் |
| துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை |
(45) |
க - து : | களவுக்காலத்துத் தலைவனது ஒழுகலாறு பற்றியதொரு தன்மை கூறுகின்றது. |
பொருள் : களவொழுக்கத்தின்கண் தனக்குத் தீங்கு பயப்பனவாக நிகழும் தனது இராசிக்குரிய பொழுதும், நாள் மீனுக்குரிய பொழுதும் ஆகா எனக் கூட்டத்தைத் துறந்து ஒழுகும் ஒழுக்கம் தலைமகற்கு இல்லை. |
ஓரையும் நாளும் என வாளா கூறியிருப்பினும் பின்னர் ஆற்றினது அருமை முதலியவற்றை இதனொடு மாட்டெறிழுந்து கூறலின் தீங்கு பயப்பதாகும். ஓரையும் நாளுமாகிய பொழுதுகள் இவை என்பது தெளியப்படும். |