சூ. 167 : | மனைவி தலைத்தாட் கிழவோன் கொடுமை |
| தம்முள வாதல் வாயில்கட் கில்லை |
(24) |
க - து : | வாயில்களின் கூற்றுப் பற்றிய தொரு மரபு கூறுகின்றது. |
பொருள் :மனையறக் கிழமை பூண்டொழுகும் தலைவியிடத்துத் தலைவனது புறத்தொழுக்கமாகிய கொடுமைகளை, அவள் புலவி தீர்தற் பொருட்டு உரைக்கும் தம் கூற்றிடத்து உளவாக உரைத்தல் வாயில்கட்கு இல்லை. |
உளவாக்கியுரைப்பின் அது புறங்கூறுதல் என்னும் குற்றத்தின் பாற்படுமாகலானும் அதனான் தலைவியது புலவி மிகுதலன்றித் தீராதாகலானும் இல்லை என்றார். |
தலைத்தாள் என்பதனைத் தாட்டலை என மாறுக என்றும் அதன் பொருள் பாதத்திடத்து என்பதாம் எனவும் அஃதொரு தகுதிச்சொல் எனவும் விளக்குவார் நச்சினார்க்கினியர். அவ் விளக்கம் ஒக்கும். எ.டு : வாயில்களின் கூற்றினுட் கண்டு கொள்க. |