சூ. 228 : | மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் |
| நினையுங் காலைப் புலவியுள் உரிய |
(32) |
க - து : | கற்பின்கண் புலவிக்காலத்துத் தலைமக்கட்கு ஆவதொரு மரபு கூறுகின்றது. |
பொருள் : பொருளியலை ஆராயுமிடத்துப் புலவியின்கண் தலைவியது உயர்வும் தலைவனது பணிவும் உரியவாம் எனக் கூறுவர் புலவர். |
உயர்வு என்றது தலைவன் பணிந்துழி உட்கும் நாணுமின்றித் தலைவி அதனை ஏற்றுத்தலைமை செய்தொழுகுதலை. பணிவு என்றது தலைமைப்பாடு கருதாது தலைவியைப் பணிந்து தாழ்ந்து இரத்தலை. இவ்வுயர்வும் பணிவும் காமத்திற்குச் சிறப்பளித்து இன்பமிகுதி செய்தலின் "புலவியுள் உரிய" என்றார். |
எ - டு : | வரையுறு மயிலின் வருந்தினை பெரிதெனத் |
| தலையுற முன்னடிப் பணிவான் போலவும் |
| கோதை கோலா இறைஞ்சி நின்ற |
| ஊதையஞ் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் |
(கலி-128) |
என அமையும். |
| ‘’காமக் கடப்பினுள் பணிந்த கிளவி |
| காணுங் காலைக் கிழவோற் குரித்தே’’ |
(கற்-13) |
என்றது கூற்றுப் பற்றியது. இது செய்கை பற்றியது என அறிக. |