பொருள் : பாணர் முதலாய வாயில்கள் தத்தமக்குரிய நெறியானே வாயிலாகக் கூறும் கூற்றுக்கள் வெளிப்படையாகக் கூறுதற்கு வருத்தமின்றியுரியதாகும். |
அஃதாவது வாயிலோர் கூற்றுக், கேட்போர்க்கு வருத்தம் தரும் இயல்பினவாயினும், குற்றேவல் மரபினராகலின் குறிப்பாற் கூறுதல் சாலாமையான் வெளிப்படையாகவே கூறுவர் என்பதும் அக்கூற்று வருந்துதற்குரியதன்று என்பதும் உணர்த்தியவாறு. |
எ - டு : | நினக்குயாம் பாணரேம் அல்லேம் எமக்கு |
| நீயும் குருசிலை யல்லை மாதோ |
| நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி |
| ஈரிதழ் உண்கண் உகுத்த |
| பூசல் கேட்டும் அருளா தோயே |
(ஐங்-480) |
எனவரும். பிறவாயில்களின் கூற்றுக்களையும் இவ்வாறே கண்டு கொள்க. |