பொருள் : களவு வெளிப்பாடு புறத்தார்க்குப் புலனாயவழி அவர்தாம் கிழவனும் கிழத்தியுமாதல் யாவர்க்கும் தெளிவாதலின் அந்நிலை கற்பினொடொப்பதாகும். ஒப்பினும் கரணமொடு புணரவரைந்து இல்லறக் கிழமை பூண்டல்லது மேற்கூறிய பிரிவுகளுள் ஓதல், பகை, தூது என்னும் மூன்று பொருளும் பற்றிப் பிரிந்து செல்லுதல் தலைவனுக்கு மரபாதலில்லை. |