சூ. 212 : | வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல் |
| மரீஇய மருங்கின் உரித்தென மொழிப |
(16) |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |
பொருள் : பொழுதும் ஆறும் வழுவிய குற்றங்காட்டல் முதலாகிய ஏதுக்களான் வரைதல் வேட்கையைக் குறிப்பாற் புலப்படுத்தலேயன்றிக் களவு நீட்டித்தலைக் கருதாது ஒழுகும் தலைவனது வேட்கையை மறுத்து வெளிப்படையாகக் கிளந்து உள்ளவாறு கூறுதலும் வழக்கின்கண் பொருந்திய பக்கத்தான் தோழிக்குரியது எனக் கூறுவர் புலவர். |
எ - டு : | கொடிச்சி இன்குரல் கிளிசெத்து அடுக்கத்துப் |
| பைங்குரல் ஏனற் படர்தரும் கிளியெனக் |
| காவலும் கடியுநர் போல்வர் |
| மால்வரை நாட வரைந்தனை கொண்மே |
(ஐங்-289) |
இதற்கு நச்சினார்க்கினியர் கூறும் வலிந்துரை கைக்கிளை, பெருந்திணை கட்குக் கூறிய இலக்கணச் சூத்திரங்களானே பெறப்படும். பொருளியலுட் கூறத்தக்க குறிப்பியைபு யாதுமின்மையின் அவர் கருத்துப் பொருந்தாமை தெளிவாம். |