| கடஞ்சூழ் நாடன் 16காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கி வடஞ்சூழ் கொங்கை மலைதாந்தாம் வடிக்க ணீல மலர்தாந்தாம் தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தாம் என்னுந் தன்கைந் தண்ணுமையே' |
என்பது அறுசீர்க் கழிநெடிலயான் வந்த ஆசிரியவிருத்தம். |
'கணிகொண் டலர்ந்த' (கா. 13.) என்பது எழுசீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம். |
'மூவடிவி னாலிரண்டு' (கா. 13.) என்பது எண்சீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம். |
'இடங்கை வெஞ்சிலை' (கா. 13.) என்பது ஒன்பதின்சீர்க் கழி நெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம். |
'கொங்கு தங்கு' (கா. 13.) என்பது பதின்சீர்க் கழிநெடிலடியான் வந்த ஆசிரிய விருத்தம். |
பதின்சீரின் மிக்கு வருவனவெல்லாம் யாப்பருங்கல விருத்தியுட் கண்டுகொள்க. |
| 'கழிநெடி லடிநான் கொத்திறின் விருத்தமஃ தழியா மரபின தகவல தாகும்' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 77.) |
'மெல்லியலே' எ - து. மகடூஉ முன்னிலை. |
| '[17 கன்று குணில்வா னுறத்தா ழிசையாங் கரைபொருகான் என்றது வண்டுளர் பூந்தா ரிரங்கு குயின்முழவாக் கொன்றார்ந் தமைந்த வகவற் றுறைகுறை யாவிருத்தம் 18பின்றாழ் குழலி 19விடங்கணி மூவடி வாதியவே.' |
இவ்வுரைச் சூத்திரக்காரிகையின் வழியே ஆசிரியப்பாவினங் கட்குக் காட்டிய இலக்கியங்களை முதனினைத்துக் கொள்க.] |
(9) |
|
(பி - ம்.) 16. காளிம்பன். 17. கன்றொடு வானுறத் தாழிசையாகுங், கன்று குணிலாத்தாழிசை யாகும் 18. முன்றாழ். 19. விடஞ்சூழ் கணிகொண்ட மூவடிவே. |
---- |