ஒழிபியல் 'சீருந் தளையுஞ்'

143

 
     'ஒற்றளபாய்விடின் ஓர் அலகாம்' எ - து. ஒற்றுக்கள் அள பெழுந்தால்
நேரசையாம்  எ-று.
 
'ஆய்தமு மொற்று மளபெழ நிற்புழி
வேறல கெய்தும் விதியின வாகும்'
 
என்றார் காக்கை பாடினியார்.
 
  ஒற்றுக்கள் அளபெழாவழி அலகுகாரியம் பெறா என்பதாம்.
'தனிநிலை யொற்றிவை தாமல கிலவே
யளபெடை யல்லாக் காலை யான'

(யா. வி. சூ. 3)

என்றார் ஆகலின்.
  'கார்க்கட னீர்த்திரையாய்க் கன்னற்கே கார்வடிவப்
போர்க்களிறு வாளிதொட்ட போது.'
 
     இதனுள் ஈரொற்று உடனிலையாய் நிற்பினுங் குற்றெழுத்தின் பயத்தவாய் அலகு
பெறாவெனக் கொள்க. என்னை?
 
  'ஈரொற் றாயினு மூவொற் றாயினும்
ஓரொற் றியல வென்மனார் புலவர்'
என்றார் ஆகலின்.
 
  (9) ['கண்ண் டண்ண்ணெனக் கண்டுங் கேட்டும்.

(மலைபடு. 352.)

  'கண்ண் கருவிளை கார்முல்லை கூரெயிறு
பொன்ன் பொறிசுணங்கு போழ்வா யிலவம்பூ
மின்ன் னுழைமருங்குன் மேதகு சாயலாள்
என்ன் பிறமகளா மாறு.

'(10) எஃஃ கிலங்கிய கையரா யின்னுயிர்
வெஃஃ குவார்க்கில்லை வீடு.'
 
     இவற்றுள் ஒற்றும் ஆய்தமும் அளபெழுந்து ஓரலகு பெற்றவாறு கண்டு கொள்க.
 
  [ 'இருவகை மருங்கினு மெய்யள பெழினே
நிரைநேர் நேர்நே ராகுத லன்றி
நிரைநிரை நேர்நிரை யாகுத லிலவே']
 
     'வாரும் வடமுந் திகழு முகிண் முலை வாணுதலே' எ - து. மகடூஉ முன்னிலை.
 

(1)


     (9) கண் தண் எனக் கண்டும்.

     (10) எஃகு - வேல்; ஆயுதப் பொது. வெஃகுதல் - ஆசைப் படுதல்.