ஒழிபியல் 'பொருளோ டடிமுத'

175

 
     என்னுங் குறளடி வஞ்சிப்பாவின் அடிமுதற்கண் 'உலகே' எனச் சீர் கூனாய்
வந்தவாறு.

     'மாவழங்கலின் மயக்குற்றன - வழி' என்னும் வஞ்சி யடியி னிறுதிக்கண் 'வழி'
என அசை கூனாய் வந்தவாறு கண்டு கொள்க.

     'கலங்கழாலிற் றுறை கலக்குற்றன' என வஞ்சியடியின் நடுவு 'துறவு' என அசை
கூனாய் வந்தவாறு.

     'தேரோடத் துகள்கெழுமிய - தெருவு' என்னும் வஞ்சியடியின் இறுதிக்கண்
'தெருவு' என உகரவீறாய் இற்ற நேரீற்று இயற்சீர் கூனாய் வந்தவாறு கண்டுகொள்க.

     'காமர் கடும்புனல்' (கலி. 39.) என்னுங் கொச்சகக் கலிப்பாவினுள் 'சிறுகுடியீரே
சிறுகுடியீரே' என அடி கூனாய் வந்தவாறு கண்டுகொள்க.

 
     இனி, ஒழிந்த 'மருள்தீர் விகாரம் வகையுளி வாழ்த்து வசை வனப்புப்
பொருள்கோள் குறிப்பிசை ஒப்பும் குறிக்கொள்' எ - து, மேல் 'எழுத்து அசை சீர்
பந்தம் அடி தொடை பா இனம் கூறுவன்' என்று அதிகாரம் பாரித்த காரிகையுள் (கா.
1.) எடுத்து ஓதப்படாத யாப்புறுப்பாய் மயக்கம் நீக்க வகுக்கப்பட்ட (1) விகாரமும்,
(2) வகையுளியும், (3) வாழ்த்தும், (4) வசையும், (5) வனப்பும்,(6) பொருளும், (7)
பொருள் கோளும், (8) குறிப்பிசையும், (9) செய்யுளொப்புமையும் ஆமாறு உபதேச
முறைமையால் உணர்க எ - று.

     'பொலங் கொடியே எ - து மகடூஉ முன்னிலை.
 

(1) விகாரம்

     அவற்றுள் : விகாரம் ஆறு வகைப்படும், வலித்தலும் மெலித் தலும் விரித்தலும்
தொகுத்தலும் நீட்டலும் குறுக்கலும் என.
 
  'குறுத்தாட் பூதஞ் சுமந்த
அறக்கதி ராழியெம் மண்ணலைத் தொழினே.'
     இதனுள் 'குறுந்தாள்' எனற்பாலதளைக் 'குறுத்தாள்' என்று வலிக்கும் வழி
வலித்தவாறு.