கண் ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு இரு விகற் பத்தானும் ஒரு விகற்பத்தானும் வருவனவும் உள ; அவை ஒருசா ராசிடை நேரிசை வெண்பா எனக் கொள்க. |
வரலாறு |
| (7) ' தாமரையின் றாதாடித் தண்டுவலைச் சேறளைந்து தாமரையி னாற்றமே தானாறும் - தாமரைபோற் கண்ணான் முகத்தான் கரதலத்தான் சேவடியெங் கண்ணார்வஞ் செய்யுங் கருத்து.' (8) 'கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத் தருமமுந் தக்கார்க்கே செய்யா - 4ஒருநிலையே முட்டின்றி மூன்று முடியுமே லஃதென்ப பட்டினம் பெற்ற கலம்.' |
(நாலடி. 250) |
இவை 5இரண்டு குறள் வெண்பாவாய் நடுவு முதற்றொடைக் கேற்ற தனிச்சொல்லாய் இடை வேறுபட்டு முறையே இரண்டசை யானும் ஓரசையானும் ஆசிட்டு இரண்டு விகற்பத்தான் வந்த ஆசிடை நேரிசைவெண்பா. |
| (9) 'ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினும் காத்தோம்பித் தம்மை யடக்குப - மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் திரிதந் தெருவைபோற் போத்தறார் புல்லறிவி னார்.' |
(நாலடி. 351) |
| (10) ' வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன் வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன் - வஞ்சியான் |
|
(7) துவலை - துளி. சேவடி நாறும். (8) கருமம் - பொருளீட்டும் தொழில்கள். உள்படா - உள்பட்டுச் செய்து. துவ்வா - நுகர்ந்து. செய்யா - செய்து. அறம் பொருள் இன்பம் மூன்றும் கூறப்பட்டன. பட்டினம் - கடற்கரையூர். (9) ஆர்த்த - மனத்தின்கண் பிணிப்புண்ட, ஆண்டு - பிராயம். முத்தொறும் - முதிருந்தோறும். எருவை - நாணல் சாதி. போத்து - உட்புரை ; உள்ளே கூடாது இருப்பது. (10) வஞ்சியேன் - வஞ்சி என்னும் ஊரினேன் ; வஞ்சளை செய்யேன் என்பது குறிப்புப் பொருள். வஞ்சியாய் - பெண்ணே. வஞ்சியார் கோ - வஞ்சி நகரில் உள்ளவர்களுக்குத் தலைவன்; சேரன் என்றபடி. |
|
(பி - ம்) 4. ஒருமுறையே 5. முதற் குறட் பாவினோடு தனிச் சொல்லிடை வேறுபட்டு நின்று இரண்டசை. |