80

யாப்பருங்கலக் காரிகை

 

உதாரண முதனினைப்பு

  'வைக றுகடீர் கடற்குட்ட மின்றுகொ லன்றுமங்கண்
எய்து மலிதேர் வளம்பட வேமழை யின்னிசையாம்
வையக மெல்லாம் பலவிகற் பேற்றது சேற்றுடனே
பையர வல்குல்பன் மாடம் பஃறொடைப் பல்விகற்பே.
 
      இவ்வுரைச் சூத்திரக் காரிகையின் வழியே முறைப்படியே இன்னிசை
வெண்பாவிற்கும் பஃறொடை வெண்பாவிற்குங் காட்டிய இலக்கியங்களை
முதனினைத்துக் கொள்க.

(4)
 

- - -
 

சிந்தியல் வெண்பா, வெண்பாவின் ஈற்றடி

25. நேரிசை யின்னிசை போல நடந்தடி மூன்றின்வந்தால்
நேரிசை யின்னிசைச் சிந்திய லாகு நிகரில் வெள்ளைக்
கோரசைச் சீரு மொளிசேர் பிறப்புமொண் காசுமிற்ற
சீருடைச் சிந்தடி யேமுடி வாமென்று தேறுகவே.
 
     இ - கை. நேரிசைச் சிந்தியல் வெண்பாவும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவு
மாமாறும், எல்லா வெண்பாவிற்கும் ஈற்றடி ஆமாறு முணர்த்....று.
 
     'நேரிசை இன்னிசை போல நடந்து அடி மூன்றின் வந்தால் நேரிசை இன்னிசைச்
சிந்தியல் ஆகும்' எ - து. நேரிசை வெண் பாவேபோல இரண்டாமடி யிறுதி
தனிச்சொற் பெற்று இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் மூன்றடியால் வருவன
வெல்லாம் நேரிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் எ - று. இன்னிசை வெண்பாவே
போலத் தனிச்சொல்லின்றி ஒரு விகற்பாகியும் பல விகற்பாகியும் மூன்றடியால்
வருவனவெல்லாம் இன்னிசைச் சிந்தியல் வெண்பா எனப்படும் எ - று, என்னை?
 
  'நேரிசைச் சிந்து மின்னிசைச் சிந்துமென்
றீரடி முக்கா லிருவகைப் படுமே'
 
     என்றார் பிறருமெனக் கொள்க.