ஆசிரியப்பாவின் இனம் |
| 29. தருக்கிய றாழிசை மூன்றடி யொப்பன நான்கடியாய் எருத்தடி நைந்து மிடைமடக் காயு மிடையிடையே சுருக்கடி யாயுந் துறையாங் குறைவிறொல் சீரகவல் விருத்தங் கழிநெடி னான்கொத் திறுவது மெல்லியலே. |
இ - கை. ஆசிரியத்தாழிசையும் ஆசிரியத்துறையும் ஆசிரிய விருத்தமு மாமாறுணர்த்.....று. |
(1) 'தருக்கியல் தாழிசை மூன்றடி ஒப்பன' எ - து. மூன்றடியாய்த் தம்முள் அளவொத்து வருவன ஆசிரியத்தாழிசையாம் எ - று. |
'தருக்கிய றாழிசை' என்று சிறப்பித்தவதனால் ஒருபொ ருண்மேல் மூன்றடுக்கி வருவன சிறப்புடைய, தனியே வரப்பெறு மாயினும் எனக் கொள்க. |
| 'மூன்றடி யொத்த முடிவின வாய்விடின் ஆன்ற வகவற் றாழிசை யாகும்' |
என்பது யாப்பருங்கலம் (சூ. 75.) |
| ['ஒத்த வொருபொருண் மூவடி முடியினஃ தொத்த ழிசையா முடன்மூன் றடுக்கின்' |
என்றார் மயேச்சுரர்.] |
வரலாறு |
| ' (2) கன்று குணிலாக் 1கனியுதிர்த்த மாயவன் இன்றுநம் மானுள் வருமே லவன்வாயிற் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தொழீ. ' பாம்பு கயிறாக் கடல்கடைந்த 2 மாயவன் ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ.' |
|
(1) தருக்கு இயல் தாழிசை - ஓசை இனிமை முதலிய நோக்கிப் பயில்வோர் தருக்குவதற்குக் காரணமான தாழிசை. (2) குணில் - குறுந்தடி. நம் ஆனுள் - நம்முடைய பசுக்கூட்டத்தினிடம், எல்லி - பகல். கொன்றை, ஆம்பல், முல்லை என்பன சில கருவி. |
|
(பி - ம்.) 1. கனியெறிந்த மாமாயன், கனியுகுத்த. 2. மாமாயன். |