101. 1கந்தழி
மாவுடைத்தார் மணிவண்ணன்
சோவுடைத்த மறநுவலின்று

(இ - ள்.) வண்டினையுடைய மாலையாற் சிறந்த நீலமணிபோன்ற மேனியையுடையான் வீரசோவென்னும் அரணத்தை அழித்த வீரத்தைச் சொல்லியது எ-று.

(வ - று.)
2அன்றெறிந் தானு மிவனா லரண்வலித்
தின்றிவன் மாறா வெதிர்வார்யார்-என்றும்
மடையார் மணிப்பூ ணடையாதார் மார்பிற்
சுடராழி நின்றெரியச் சோ.

(இ - ள்.) அந்நாள் அழித்தவனும் இவன்,அரண்வலிதென்றுதேறி; இந்நாள் இவன்பகையாக எதிர்ப்பார் யார் எக்காலத்தும் ?மூட்டார்ந்த மணியணியையுடைய பொருந்தாதாருடைய அகலத்து ஒளிவிடுந் திகிரி நின்று அழலச் சோவென்னும் அரணத்தை எ-று.

இஃது உவமையன்று; மிகுதி கூறியது.

(7)

1. கந்தழி : தொல். புறத். சூ 33.
2. தொல். புறத். சூ. 27. இளம். மேற்.