மறத்துறை மலிந்து மண்டி மாற்றார் விறற்கொடி மதிலின் புறத்திறுத் தன்று. (இ - ள்.) சினத்தின் வழிமிக்கு மேற்கொண்டு பகைவருடைய வெற்றிக்கொடியணிந்த அரணின் சுற்றிலே விட்டது எ-று. (வ - று.) புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப் பல்லார் மருளப் படைபரப்பி-ஒல்லார் நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின் புறத்திறுத்தான் பூங்கழலி னான். (இ - ள்.) பகைவர் புகுமிடமும் ஓடிப்போம் வழியும் இன்றியேயொழியப் பொங்கியெழுந்து பலமன்னரும் மயங்கத் தன் சேனையைக் கைவளரவிட்டுப் பகைவர் மருமத்திலே குளித்த வாட்சேனையினையுடைய பகைவர் அரணத்தின் பக்கத்திலே பாடிவீடு கொண்டான், பொலிந்த வீரக்கழலினையுடையவன் எ-று. (10) |