விண்டோயு மிளைகடந்து குண்டகழிப் புறத்திறுத்தன்று. (இ - ள்.) ஆகாயத்தைக் கிட்டும் காவற்காட்டைக் கடந்து ஆழ்ந்த கிடங்கின் கரையிலேவிட்டது எ-று. (வ - று.) கோள்வாய் முதலைய குண்டகழி நீராக வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான்-நீள்வாயில் ஓங்க லரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப ஆங்கொ லரிய வமர். (இ - ள்.) ஆளைப் பற்றுகை தப்பாத முதலையினையுடைய குழிந்த அகழே தண்ணீராக வாய்த்த வாளினையுடைய மறமன்னன் வந்து விட்டான்; நீண்ட 1வாய்தலாற் சிறந்த உயர்ச்சியினையுடைய மதிலிடத்து ஒள்ளிய வளையினையுடையார் வெய்தாக உயிர்ப்ப வெல்லுதற் கரிய பூசல் ஆம்போலும் எ-று. (16)
1. வாய்தல்-வாசல் |