மாறுகொண்டார் மதிலழிய 1ஏறுந்தோட்டியு மெறிந்துகொண்டன்று. (இ - ள்.) பகைகொண்டார் அரணங்கெட யானையையும் காவலையும் பகைவரை யெறிந்து கைக்கொண்டது எ-று. (வ - று.) ஏவ லிகழ்மறவர் வீய விகல்கடந்து காவலும் யானையுங் கைக்கொண்டான்-மாவலான் வம்புடை யொள்வாண் மறவர் தொழுதேத்த அம்புடை ஞாயி லரண். (இ - ள்.) தன் ஏவலைச் செய்யாத வீரர் கெட மாறுபாட்டைக் கடந்து தோட்டியையும் களிற்றையும் கைப்பற்றினான் குதிரைத் தொழிலைவல்லவன்; கச்சினையுடைய ஒள்ளிய வாள்வீரர் பணிந்து வாழ்த்த பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து எ-று. ஏவல் - எவை வல்லவென்றுமாம். (24)
1. பெருங், 1.37: 212 |