120. உழுது வித்திடுதல்
எண்ணார் பல்லெயில் கழுதையே ருழுவித்
துண்ணா வரகொடு கொள்வித் தின்று.

(இ - ள்.) பகைவருடைய பலஅரணும் கழுதையாகிய ஏரிட்டுழுது கவடியுடன் குடைவேலை விதைத்தது எ-று.

(வ - று.)
எழுதெழின் மாடத் திடனெலா நூறிக்
1கழுதையேர் கையொளிர்வேல் கோலா-உழுததற்பின்
வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற்
கள்விரவு தாரான் கதம்.

(இ - ள்.) 1சித்திரமெழுதிய அழகிய மாளிகை முழுதும் இடித்துக் கழுதையே ஏராகவும் கையில் விளங்கும் வேலே கோலாகவும் உழுது அதற்குப் பின்பு கவடியும் குடைவேலும் வித்தினும் கெடாதால்; தேன் கலந்த மாலையினையுடைவன் கோபம் எ-று.

(26)

1. தொல், புறத் . சூ. 13, ந; புறநா. 15:-23, 392: 9-11: சிலப் 27: 55-6; காஞ்சிப் . நாடு. 28 2. "மாடக்குச் சித்திரமும்" (பழைய செய்யுள்.)