122. மண்ணுமங்கலம
1வணங்காதார் மதிற்குமரியொடு
மணங்கூடிய மலிபுரைத்தன்று.

(இ - ள்.) பணியாதார் அரணாகிய கன்னியுடன் வதுவைபொருந்திய மிகுதியைச் சொல்லியது எ-று.

(வ - று.)
2எங்கண் மலர வெயிற்குமரி கூடிய
மங்கல நாள்யா மகிழ்தூங்கக்-கொங்கலர்தார்ச்
செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே
மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி.

(இ - ள்.) எம்முடைய கண் மலர அரணாகிய கன்னியினை மணந்த மணநாளிலே யாம் மகிழ்ச்சியெய்த மதுவலரும் கோவைமாலையினையும் கையாற்செய்யப்பட்டு ஒளிசிறந்த ஆபரணத்தினையுமுடைய வேந்தன் தாள் நிழற்கீழே தங்கின; செறிந்த சோதியால் நிறைந்த அணிகலத்தை யுடைய அரசர் முடிகள் எ-று.

(28)

1. பு.-வெ. 107.
2. தொல் . புறத். சூ.11, இளம். மேற