125. அடிப்பட விருத்தல்
பேணாதார் மறங்கால
ஆணைகொண் டடிப்படவிருந்தன்று.

(இ - ள்.) பகைவர்தாம் சினத்தை உமிழத் தன் ஆணையை ஏற்றுக் கொண்டு நாடு வழிப்பட நெடுங்காலம் இருந்த இருப்பிலே இருந்தது எ-று.

(வ - று.)
ஒன்றி யவர்நா டொருவழித்தாய்க் கூக்கேட்ப
1வென்றி விளையா விழுமதிலோர்-என்றும்
பருந்தார் செருமலையப் பாடி பெயரா
திருந்தா னிகன்மறவ ரேறு.

(இ - ள்.) பொருந்திய பகைவர்தேசம் ஒருவழிப்பட்டு ஏவல்கேட்பத் தங்கள் வெற்றியைத் தங்கள் பக்கல் உண்டாக்கமாட்டாத சீரிய அரணிடத்தோர் எந்நாளும் பருந்துநிறையும் பூசலைச் செய்யாநிற்பப் பாசறையை விட்டு நீங்காது அவ்விருப்பிலேயே யிருந்தான், மாறுபாட்டாற் சிறந்த வீரருக்கு இடியேறனையான் எ-று.

(31)

1. நன். சூ.451, மயிலை. மேற்.