128. தும்பை அரவம்
பொன்புனைந்த கழலடியோன்
தன்படையைத் தலையளித்தன்று.

(இ - ள்.) அழகணிந்த வீரக்கழற்காலினையுடையான் தனது சேனையைத் தலையளி பண்ணியது எ-று.

(வ - று.)
1வெல்பொறியு நாடும் விழுப்பொருளுந் தண்ணடையும்
கொல்களிறு மாவுங் கொடுத்தளித்தான் - பல்புரவி
நன்மணித் திண்டேர் நயவார் தலைபனிப்பப்
பன்மணிப் பூணான் படைக்கு .

(இ - ள்.) போர்வெல்லும் அடையாளமும் 2பற்றும் சிறந்ததனமும் மருத நிலமும் கொல்லும் யானையும் குதிரையும் வழங்கி அருள்செய்தான்;பல பரியினையும் நல்ல மணிமிடைந்த திண்ணிய தேரினையுமுடைய பகைஞர் அஞ்சித் தலைநடுங்க , நவமணி அழுத்தின ஆபரணத்தினையுடையான், சேனைக்கு எ-று.

(2)

1. குறள். 762, பரிமேல். வி. 2. பற்று - பல ஊர்களையுடைய சிறுநாடு.