132. யானைமறம்
எழுமரவக் கடற்றானையான்
மழகளிற்றின் மறங்கிளந்தன்று.

(இ - ள்.) மிகும் ஆரவாரத்தால் நிறைந்த கடல்போன்ற சேனையினை யுடையான் இளங்களிற்றினது மறத்தைக் கூறியது எ-று.

(வ - று.)
அடக்கருந் தானை யலங்குதார் மன்னர்
விடக்கு முயிரு 1மிசையக் - கடற்படையுள்
பேயு மெருவையுங் கூற்றுந்தன் பின்படரக்
காயுங் கழலான் களிறு.

(இ - ள்.) விலக்குதற்கரிய சேனையினையும் விளங்கும் கோவை மாலையினையுமுடைய அரசர் தசையினையும் உயிரினையும் உண்ண வேண்டிக் கடல்போன்ற சேனையுட் பேயும் கழுகும் கூற்றும் தனது பின் செல்ல வெகுளும், வீரக்கழல் வேந்தன் யானை எ-று.

பேயும் எருவையும் விடக்குண்ணப் பின்படரவென்க.

(6)

1. முணிய