பொருபடை களத்தவிய இருவேந்தரு மிகலவிந்தன்று. (இ - ள்.) போர்செய்யும் சேனையிரண்டும் களத்திற்பட இருவர் அரசரும் மாறுபாட்டாற் பட்டது எ-று. (வ - று.) 1காய்ந்து கடுங்களிறு கண்கனலக் கைகூடி வேந்த ரிருவரும் விண்படர - ஏந்து பொருபடை மின்னப் புறங்கொடா பொங்கி இருபடையு நீங்கா விகல் . (இ - ள்.) கனன்று கடிய யானை கண்ணழலக் கண்ணுற்று அரசரிருவரும் விண்ணைச்சேர எடுக்கும் போர்செய்யும்படை ஒளிவிட வென்னிடாவாகி வெகுண்டு இரண்டுசேனையும் ஒழியாவாயின , மாறுபாட்டை எ-று. அரசும் படையும் மடிந்தவாம். (12)
1. தொல். புறத். சூ. 14, இளம். மேற். |