139. எருமை மறம்
1வெயர்பொடிப்பச் சினங்கடைஇப்
பெயர்படைக்குப் பின்னின்றன்று.

(இ - ள்.) வேரரும்பச் சினத்தைக் கடாவி முதுகிட்ட தன் சேனைக்குப் பின்னே நின்றது எ-று.

(வ - று.)
கடுங்கண் மறவன் கனல்விழியாச் சீறி
நெடுங்கைப் பிணத்திடை நின்றான் - நடுங்கமருள்
ஆள்வெள்ளம் போகவும் போகான்கை வேலூன்றி
வாள்வெள்ளந் தன்மேல் வர .

(இ - ள்.) தறுகண்வீரன் நெருப்புப்போல் விழித்துக் கோபித்து நெடிய கையையுடைய யானைப்பிணத்தின் நடுவே நின்றான்; கண்டார் நடுங்கும் போரிடத்துக் காலாள் வெள்ளம் இரிந்தோடவும் போகானாகித் தன் கைவேலை ஊன்றி, பகைவர் வாட்படைவெள்ளம் தன்மேலே அடர்ந்துவர எ-று.

(13)

1. "மெய்யது வியரே" (புறநா. 100-2)