141. நூழில்
கழல்வேந்தர் படைவிலங்கி
அழல்வேறிரித் தாட்டமர்ந்தன்று.

(இ - ள்.) வீரக்கழன்மன்னர் சேனையைக்கொன்று அழலும்வேலைத் திரித்து ஆடுதலை விரும்பியது எ-று.

(வ - று.)
ஆட லமர்ந்தா னமர்வெய்யோன் வீழ்குடர்
சூடன் 1மலைந்த சுழல்கட்பேய் - மீடல்
மறந்தவேன் ஞாட்பின் மலைந்தவர் 2மார்பம்
திறந்தவேற் கையிற் றிரித்து.

(இ - ள்.) ஆடுதலை மேற்கொண்டான் போரை விரும்பினோன்; வீழ்ந்த குடரைச் சூடுதலை மேற்கொண்டன சுழலும் விழியினையுடைய பேய், மீளுத லொழிந்த வேற்பொருள் மாறுபட்டவர் மார்பத்தை உருவின வேலைக் கையிலே திரித்து எ-று.

(15)

1. மலிந்த
2. குறள். 774.