மன்ன னூரு மறமிகு மணித்தேர்ப் பின்னு முன்னும் பேயா டின்று. (இ - ள்.) அரசன் செலுத்தும் கொடுமைமிக்க மணியையுடைய தேரின் பின்பும் முன்பும் பேய் ஆடியது. (வ - று.) முன்னரும் பின்னரும் மூரிக் கடற்றானை மன்ன னெடுந்தேர் மறனேத்தி- ஒன்னார் நிணங்கொள்பேழ் வாய 1நிழல்போ னுடங்கிக் கணங்கொள்பே யாடுங் களித்து. (இ - ள்.) முன்னும் பின்னும், பெரிய கடல் போன்ற சேனையையுடைய அரசன் நெடியதேரின் மாறுபாட்டை வாழ்த்திப் பகைவரது நிணத்தைக் கொண்ட பெரிய வாயினையுடைய திரண்ட பேய் சாயை போல அசைந்து மகிழ்ந்து நடமாடும் எ-று. (19)
1. சீவக.309. |