இருபடையு மறம்பழிச்சப் பொருகளத்துப் பொலிவெய்தின்று. (இ - ள்.) இரண்டுசேனையும் மறத்தை ஏத்தப் போர்க்களத்துச் சிறப்பெய்தியது எ-று. (வ - று.) நேரார் படையி னிலைமை நெடுந்தகை ஓரா னுறைகழியா னொள்வாளும்- தேரார்க்கும் வெம்பரிமா வூர்ந்தார்க்கும் வெல்களிற்றின் மேலார்க்கும் கம்பமா நின்றான் களத்து. (இ - ள்.) பகைவர்சேனையின் உரத்தைப் பெரிய மேம்பாடினையுடையவன் விசாரியான்,வாளும் உறையினின்றும் வாங்கான்,தேர்வீரர்க்கும் வெய்யசெலவினையுடைய குதிரையைச் செலுத்தினார்க்கும் வெல்லும் யானையின் மேலார்க்கும் நிலைத்தூண்போலக் களத்தின்கண் நின்றான் எ-று. கம்பம்- நடுக்கமுமாம். (22) |