1தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று. (இ - ள்.) கட்டி ஆர்க்கும் வீரக்கழலினையுடைய தறுகண்ணர் மதுவையுண்டு மனங்களித்து ஆடியது எ-று. (வ - று.) 2இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி களிகொண்ட நோக்கங் கவற்றத் - தெளிகொண்ட வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேற் செங்கண் மறவர் சினம். (இ - ள்.) இளியென்னும் இசையினைக்கொண்ட இனிய சொல்லினையுடைய இளைய சீமதியான வேட்டுவிச்சி களிப்புக்கொண்ட பார்வை வருத்தவும் தெளிவுகொண்ட வெவ்விய கள்ளையுண்ட மகிழ்ச்சி மிகவும் கெடுவது போலும், பகைவர்மேற் சிவந்த கண்ணினையுடைய வீரர் செற்றம் எ - று. சினம் விளிவதுகொலெனக் கூட்டுக. இஃது 3"ஒருமை சுட்டிய" என்பதனுளமைத்த, "ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப" என்பதுபோலாம். (15)
1. புறநா. 257 - 8. உரை. மேற். 2. தொல். புறத். சூ. 3, இளம். 3. தொல். எச்ச. சூ. 65, சே. ந. |