15. உண்டாட்டு
1தொட்டிமிழுங் கழன்மறவர்
மட்டுண்டு மகிழ்தூங்கின்று.

(இ - ள்.) கட்டி ஆர்க்கும் வீரக்கழலினையுடைய தறுகண்ணர் மதுவையுண்டு மனங்களித்து ஆடியது எ-று.

(வ - று.)
2இளிகொண்ட தீஞ்சொ லிளமா வெயிற்றி
களிகொண்ட நோக்கங் கவற்றத் - தெளிகொண்ட
வெங்கண் மலிய விளிவதுகொல் வேற்றார்மேற்
செங்கண் மறவர் சினம்.

(இ - ள்.) இளியென்னும் இசையினைக்கொண்ட இனிய சொல்லினையுடைய இளைய சீமதியான வேட்டுவிச்சி களிப்புக்கொண்ட பார்வை வருத்தவும் தெளிவுகொண்ட வெவ்விய கள்ளையுண்ட மகிழ்ச்சி மிகவும் கெடுவது போலும், பகைவர்மேற் சிவந்த கண்ணினையுடைய வீரர் செற்றம் எ - று.
சினம் விளிவதுகொலெனக் கூட்டுக.

இஃது 3"ஒருமை சுட்டிய" என்பதனுளமைத்த, "ஏவ லிளையர் தாய்வயிறு கரிப்ப" என்பதுபோலாம்.

(15)

1. புறநா. 257 - 8. உரை. மேற். 2. தொல். புறத். சூ. 3, இளம். 3. தொல். எச்ச. சூ. 65, சே. ந.