பகைபுகழக் கிடந்தானை முகைமுறுவலார் முயக்கமர்ந்தன்று. (இ - ள்.) பகைவர் சீர்த்திபண்ணக் கிடந்தானை 1முல்லைமொட்டுப் போன்ற பல்லினார் தழுவுதலை மேவியது எ-று. (வ - று.) எங்கணவ னெங்கணவ னென்பா ரிகல்வாடத் தங்கணவன் றார்தம் முலைமுகப்ப - வெண்கணைசேர். புண்ணுடை மார்பம் பொருளகத்துப் புல்லினார் நுண்ணிடைப் பேரல்கு லார். (இ - ள்.) எம்முடைய கணவன் எம்முடைய கணவனென்று சொல்லும் பரத்தையர் மாறுபாடுகெடத் தமது கொழுநன்மாலை தம்முலை முகந்துகொள்ள வெய்ய அம்புபட்ட புண்ணினையுடைய மார்பகத்தைப் போர்க்களத்துத் தழுவினார்; நுண்ணிய இடையினையும் பெரிய அல்குலினையுமுடைய குலமகளிர் எ-று. எங்கணவ னெங்கணவ னென்பார் தெய்வமகளிரென்றுமாம். (24)
1. முல்லையரும்பன்ன |