158. முரச வாகை
ஒலிகழலா னகனகருட்
பலிபெறுமுரசின் பண்புரைத்தன்று.

(இ - ள்.) ஆரவாரிக்கும் வீரக்கழலினை யுடையானது பரந்த மாளிகையிடத்துப் பலியைப்பெறும் முரசினையுடைய தன்மையைச் சொல்லியது எ-று.

(வ - று.)
மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து
1புதிய புகழ்மாலை வேய - நிதியம்
வழங்குந் தடக்கையான் வான்றோய் நகருள்
முழங்கு மதிரு முரசு.

(இ - ள்.) நிறைந்த மதியையொக்கும் உயர்ந்த கொற்றக்குடையினையுடைய அரசர் தாழ்ந்து புதிதான கீர்த்தித் தெரியலைச் சூட்டப் பொருளைப் பலர்க்குங் கொடுக்கும் பெரிய 2கையினையுடைய அரசனது விண்ணைக்கிட்ட உயர்ந்த மாளிகையிடத்து இப்பொழுது ஆர்ப்பரவம் பண்ணா நின்றது, முன்பு பகையுள்ள காலத்து இடிக்கும் முரசு எ-று.

(4)

1. மூவாவிழுப்புகழ் (பு-வெ. 222).
2. கையினையுடையது